நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை இப்போது ஈ.சி.ஆரில் திறக்கப்பட்டுள்ளது!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh28SGXue9BNNMq6QMUeygA3wTbmE_cWRCqp4nSIEUD76wDx_ixr6AEm7cEinlxHjQzSJb8pMTktopoMGwBKXViV_XuvPPOWgjb3jIDrsvnDDSeWSpdo1bm2J0y72sya4UFgo4yFvB5bkMj8IY_KKI2M8IvIovNpBs0vkgi6xT2RwuUCRiEEw9bSImKPo4/s320/IMG-20230723-WA0049.jpg)
சென்னையில் அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல் கிளைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அதன் இரண்டாவது கிளையை 21 ஜுலை 2023ல் வரவேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிமுன் அன்சாரி மற்றும் டாக்டர் ஹபீப் நாதிரா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஹாரத்தி கணேஷ், கணேஷ்கர், அஜய்ராஜ், உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது மதிப்புமிக்க வருகையால் இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஹப்பின் நிறுவனரான நாசர் சார் என்னுடைய குடும்ப நண்பர். அவரது இந்த சாதனையை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தனது அணுகுமுறையில் ரொம்பவே அப்டேட்டாக இருப்பதுடன் இளைஞர்களின் நாடித்துடிப்பையும் நன்கு