கொடை பட இசை வெளியீட்டு விழா !
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDLPGrEs3k7E-N9yjeZkygVGL3fJ8dXxwbhiYrVAnC07Xa-UK3R7UYs4D9rzrSAZDcyWV5zOQFuhkUasVwEhi2sg0eBBziK32ulkhIr-SS8uvyAerkH4B5JK0IPe0keyMfRQG1ndjYnxLSpZ_BKGVbfEHKB2mQijLH9vLzU1D3TBcRRaSPWk7P-0oc/s320/IMG-20220818-WA0037.jpg)
எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது. இவ்விழாவினில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசியதாவது.., இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. நடிகர் கார்த்திக் சிங்கா பேசியதாவது