மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggVneZkZBT4ihO-Ne_x4rqJrXjCSUyDAIIZyFUDYXdoDR_E1ke2T9d5i2wo2ZScXVQIvaxd4tsMqbv1ke42PHpcQvfGkGKrctefBNhH3uvjJnWz2ZGh6mXFWjDpR5UqZyDeoIG-AwgvbovMkLlcDLnOtNurB4Sl3h3tyf5bFeCBVo2UznAmTYWb9Y9/w400-h265/WhatsApp%20Image%202022-04-28%20at%209.34.12%20AM.jpeg)
தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும் , 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற - சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் . அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.