பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'..!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixmByzx-1XQ0VLSaeSySh32th0PSQQAJe4CsSQn_kzS6tbcGSQURjc8Y6Li-g1PiEbfJsxSr_vqUQ7A3cMngIKDNRv3LYALv-IHwYlAWNg4tbF2mVZjk7EOb1QqXPLFa09MfPtOoYE_CoqrGSgm4_ee0zRJonqQ1_McUbA8bPUbBbi4MZ0jYZB7qON2og/s320/TRPL2917.jpg)
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரசாத் முருகன் கூறுகையில்.. மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான். அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை